மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பொதுச் சந்தைக்கு அருகில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்துள்ளார். நாவற்குடா இந்து கலாசார நிலையத்திற்கு முன்னால் இருந்து இந்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசாரணை மீட்கப்பட்ட ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.